எதிர்காலத்தில் இந்நாட்டிலுள்ள பெருவாரியான அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறக்கூடும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிததுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல், குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறிவருகின்றது.
கடந்த காலங்களில் , மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொருவராக சிறைச்சாலைக்கு செல்கின்றனர்.

மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த ஜனாதிபதிகள்கூட 2 சம்பளங்களை பெற்றுவந்தனர். எம்.பிக்களாக இருந்ததற்குரிய சம்பளத்தையும் பெற்றனர். ஜனாதிபதிக்குரிய சம்பளத்தையும் பெற்றனர்.

ஆனால் எமது ஜனாதிபதி அவ்வாறு செயற்படுவதில்லை. ஜனாதிபதி மாளிகைகளைக்கூட நிராகரித்துள்ளார். எமது அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களும் அப்படிதான். எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சம்பளத்தை மட்டுமே பெறுகின்றோம் என்றார்.








