போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பிரசாத்தின் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதில் உள்ள வாட்ஸ் அப் தரவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த பிரதீப் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் ‘தீங்கரை’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இந்தப் படத்தை தயாரித்து வரும் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் தேவைப்படுவதாகக் கூறி, தன்னிடம் இருந்து வாங்கி சென்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.








