தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து பாஸ்கரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வைரவன், ‘‘பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் அவர் கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே அவரை திருப்பி அனுப்பும் முடிவை இரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதியரசர்கள், “பாஸ்கரன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு விசாக்கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
அது சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பரிசீலனையில் உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு பாஸ்கரனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று மனு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்த நீதியரசர்கள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.








