Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மீண்டெழும் (Recurring) செலவினங்களைக் குறைத்து, நாட்டின் அபிவிருத்திக்கான மூலதனச் செலவினங்களை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் திட்டங்களைத் தயாரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தற்போது சுமார் 9 சதவீதமாக உள்ள மீண்டெழும் செலவினங்களைக் குறைத்து, 4 சதவீதமாக உள்ள மூலதனச் செலவினத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனக் குறிப்பிட்டார்.

2027ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினமாக ரூ.2 டிரில்லியன் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தற்போதைய ஒதுக்கீட்டைவிட சுமார் 40 சதவீத அதிகரிப்பாக அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டின் அபிவிருத்திக்காக பயனுள்ளதாகச் செலவிடப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை எனத் தெரிவித்த அவர், எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையை ஏற்படுத்தாத, நிதி ஒழுக்கம் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவது அரசின் பிரதான நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது, அரச துறையின் செயல்திறனை உயர்த்துவது மற்றும் அனுபவம் மிக்க அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்ள சில துறைகளில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், காலி மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தி, குடிநீர் திட்டங்கள், வீடமைப்பு, விளையாட்டுத்துறை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.