இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை படகு கவிழ்ந்ததில் தண்ணீரில் மூழ்கியவர்களில் 23 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 38 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களை மீட்பதற்காக பல படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.








