ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளை குறிவைத்து ரயில் சேவை பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபா 112,480 ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் இல்லாமல் பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் துப்புரவுத் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சிலர் பொழுதுபோக்குக்காக அனுமதி சீட்டுக்கள் இல்லாமல் பயணம் செய்ததாக ஒப்புக்கொண்டனர்.








