ஒரு அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம் எனும் தோனிப்பொருளில் கிளின் ஸ்ரீலங்காவேலை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று செங்கலடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில்நேற்று (08) 8.30 மணியளவில் களுவன்கேணி கடற்கரை பகுதியினை சுத்தம் செய்து கலப்பு பகுதிகளில் கண்ணா மரங்களை நட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது பெருமளவான குப்பைகள் தேங்கி கிடந்த இடங்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் கலப்புக்கல் மற்றும் கால்வாய் பகுதிகளில் மரங்கள் நடப்பட்டது.
சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பொது அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் இதன்போது தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் கருத்து தெரிவித்தார்.
















