பெண்கள் மற்றும் பெண்கள் கல்வி மீதான உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தி, அவர்களை முற்றாக சமூகத்தில் இருந்து தவிர்த்தெறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, ஆப்கானிஸ்தானின் (தலிபான்) உச்ச தலைவராக செயற்படும் முல்லா ஹைபதுல்லா அகுன்சாடா மற்றும் அந்த நாட்டின் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமான வாழ்க்கை ஆகியவற்றில் இருந்து கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 2021ல் தாலிபான்கள் மீண்டும் ஆட்சி கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் கடுமையான கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது மனித உரிமை மீறல்களில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படும் இந்த இருவரும், நீதிமன்றம் முன் ஆஜராகச் செய்யப்படவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ICC வின் (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) முதன்மை விசாரணையின் அடிப்படையில், பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் மீதான தடை மட்டுமல்லாமல், மனிதாபிமான உரிமைகள் மீறல்கள், சமூக விலக்குகள், மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றும் கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பிடியாணை, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளதுடன், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சி, சர்வதேச நீதிமன்றத்துடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.








