Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளி; பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ள மாணவன்

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளி; பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ள மாணவன்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படும் காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தனியார் கல்லூரி மாணவன் ஒருவர் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாவனெல்லாவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து மாணவரான 21 வயதான முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கடந்த ஒன்பது மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாவனெல்லாவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து மாணவரான சுஹைல், தனது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காக 2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் தெஹிவாலா கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது அடையாள அட்டை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், நீதிமன்றம் முன்பு அவரை பிணை இல்லாமல் விடுவித்த போதிலும், இன்ஸ்டாகிராம் வீடியோ தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மாணவன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் மாணவர் தொடர்பில் முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றத்திற்கான எந்த ஆதாரத்தையும் பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவரது குடும்பத்தினரும் முறைப்பாடு அளித்துள்ளனர். குற்றச்சாட்டு இல்லாமல் நீட்டிக்கப்பட்ட விளக்கமறியல் தொடர்பில் உரிமைகள் குழுக்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவரது வழக்கு இன்று (9) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
Next Post
விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம்: சீமான்

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம்: சீமான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.