குற்றவியல் கும்பலொன்றுடன் கூட்டுச் சேர்ந்து, உயர்மட்ட விசாரணைகளில் தலையீடு செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பொலிஸ் அமைச்சர் சென்சோ சுனுவை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உடனடி விடுப்பில் அனுப்பியுள்ளார்.
குவானாசியின் குற்றச்சாட்டுகளை ம்சுனு கடந்த (13) ஊடக சந்திப்பில் மறுத்ததாக மாகாண பொலிஸ் ஆணையாளர் நஹ்லான்ஹ்லா தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் மிக உயர்ந்த பதவியை தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோசா அடைந்துள்ளார்.
அரசியல் கட்சிகளும் குடிமக்களும் குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குவதாகக் கூறியதால், விரைவாகச் செயல்பட வேண்டிய அழுத்தம் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட பின்புலத்தில் பொலிஸ் அமைச்சரை உடனடி விடுப்பில் அனுப்பியுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








