இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல்-412 ரக உலங்குவானூர்தி ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள டாக்ஸிலா கல்லூரி மைதானத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு கருதி விமானம் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கேப்டன் எராண்டா கீகனகே தெரிவித்தார்.
குறித்த விமானம் இன்று காலை ரத்மலானை விமானப்படை தளத்திலிருந்து பயிற்சி அமர்வுக்காக புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தரையிறங்கிய விமானம் சிறிது நேரம் பாடசாலை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ரத்மலானை விமானப்படை தளத்திற்கு மீண்டும் புறப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.








