வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தமது நாடு வெற்றிபெறும் என்று கூறியிருப்பதாக அந்நாட்டு உள்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரியப் போர் நிறுத்த ஆண்டுநிறைவை அனுஷ்டிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளதாக வடகொரியாவின் அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) அந்தத் தகவலை நேற்று (27) தெரிவித்துள்ளது.

வடகொரியாவை வளமிக்க நாடாக உருவாக்கும் உன்னத இலக்கில் நாடும் நாட்டு மக்களும் வெற்றிபெறுவது நிச்சயம் என்றும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் கௌரவமான முறையில் அந்த வெற்றியை வடகொரியா எட்டும் என்று அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








