Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வறட்சி; குடிதண்ணீருக்காக மிக நீண்ட தூரம் பயணிக்கும் நெடியமடு மக்கள்!

மட்டக்களப்பில் வறட்சி; குடிதண்ணீருக்காக மிக நீண்ட தூரம் பயணிக்கும் நெடியமடு மக்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிச்சேனை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிதண்ணீரின்றி தாம் தினமும் சிரமப்படுவதாகவும், குடிதண்ணீருக்காக மிக நீண்ட தூரம் பயணித்து அதனைப் பெற்றுக் கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவும் கடந்தகால யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்ட அந்த மக்கள் தினமும் அதிகாலை வேளையில் குடி தண்ணீர் எடுப்பதற்காக மிக நீண்ட தூரம் கால்நடையாகச் செல்லும்போது காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உட்படுவதாகவும், தொடர்ந்து அச்சத்துடன் பயணித்து குடிதண்ணீரைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது பிள்ளைகள் உரிய நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்வதில் சிரமம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தொடரும் வறட்சி நிலைமை காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 2000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் பிரதான தொழிலாக காணப்படும் விவசாயம் மற்றும்கால்நடை வளர்ப்பும், என்பன இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு ரிய பச்சைப் புற்கள் தற்போது கருகிய நிலையில் காணப்படுவதாகவும் கால்நடைகள் குடிதண்ணீர் இன்றி அலைந்து திரிவதாகவும் தெரிவிக்கும் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்று குழாய் மூலமான குடிதண்ணீரைப் பெற்றுத்தர துறைசார்ந்தவர்கள் உடன் முன்வரவேண்டும்எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகள் வறட்சி காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பயன்தரும் மரங்களும், பாதிக்கப்பட்டுள்ளன.சிறுவர்கள் நீண்ட தூரம் பயணித்து குளிப்பதற்குச் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பன்ச்சேனை, கரவெட்டி. நெடியமடு, தாண்டியடி, காந்திநகர், உன்னிச்சை, உள்ளிட்ட பல கிராம மக்கள்
இந்த வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குடிதண்ணீர் வழங்கல் திட்டம் அந்தமக்கள் வாழ்கின்ற, வவுணதீவில் காணப்படுகின்றபோதிலும்,
அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள கிராம மக்களுக்கு அந்த திட்டத்தினூடாக விநி
யோகிக்கப்படும் குடிதண்ணீர் கிடைக்காமல் அவர்கள் காட்டுயானை தாக்கத்துக்கு உள்ளாவதும் தொடர் கதையாகவே இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு உரிய குடிதண்ணீர் வழங்குறிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்
செய்திகள்

புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

June 19, 2025
அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு
உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு

June 19, 2025
சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு
உலக செய்திகள்

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

June 18, 2025
இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன
செய்திகள்

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

June 18, 2025
கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை
செய்திகள்

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

June 18, 2025
தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை
உலக செய்திகள்

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை

June 18, 2025
Next Post
எரிவாயு விலை அதிகரிப்பை உறுதி செய்தது லிட்ரோ!

எரிவாயு விலை அதிகரிப்பை உறுதி செய்தது லிட்ரோ!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.