மட்டக்களப்பில் சர்வதேச கராத்தே நுட்பங்களை பற்றிய மூன்று நாட்கள் பயிற்சி செயல்முறை வெபர் உள்ளக அரங்கில், கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர் மற்றும் பொறியியாளர் எஸ். முருகேந்திரன் தலைமையில் கடந்த (19) அன்று தொடங்கியது.
இந்த பயிற்சி நிகழ்ச்சியில் யப்பான் கராத்தே டோ மரியோ சிக்காய் (Japan Karate-Do Maruyoshikai) அமைப்பின் நுட்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
1999ஆம் ஆண்டில், யப்பான் கராத்தே மரியோ சிக்காய் ஸ்தாபகர் சிகான் சஷாக்கி டொசி யட்சு அவர்களின் பங்களிப்பில், கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் தலைமையில் மட்டக்களப்பில் தொடங்கிய இந்த அமைப்பு, நேற்று (09) தனது 25வது ஆண்டு விழாவினை கொண்டாடியது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கராத்தே ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கிய இக்குழு, மாவட்டம் மட்டுமின்றி மாகாணம், தேசியம் மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பல சாதனைகள் பெற்றுள்ளது.
இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் மாணவர்களின் உடல் வலிமை மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே ஆகும்.
இந்நிகழ்வில் யப்பான் நாட்டைச் சேர்ந்த சென்சி சுமி டக்குரோ, சென்சி ஓஹா கஸ்யுகி, சென்சி புஜிடா மசாகி மற்றும் பிரதம போதனாசிரியர் சென்சி தனஞ்செய் அபயவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








































