காவல்துறை நித்திரை கொள்கின்றதா என மக்கள் கேள்வி எழுப்புவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்குதவற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் மூலம் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதாகவும் சொத்துக்கள் அழிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் நித்திரை கொள்கின்றார்களா என பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் கேள்வி எழுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நீதியை நிலைநாட்டுவதற்கு காலம் தாழ்த்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு உரிய நேரத்தில் நீதி நிலைநாட்டப்படவிட்டால் பெரும் சோகங்கள் நிகழக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் கடமைகளை சரியாகச் செய்யத் தவறினால் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹியங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
.








