யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஒப்புக்கொள்ளப்பட்ட மாதாந்த இழப்பீட்டு கொடுப்பனவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (20) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது.
இலங்கை முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் இணைந்து ஒரே நேரத்தில் போராட்டத்தை நடத்தியது.

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும், நீக்கப்பட்ட 20% கொடுப்பனவை உடனடியாக மீள வழங்க வேண்டும், அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்க வேண்டும், மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதாக குற்றச்சாட்டு பேன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டம், அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டியது. இதனால், பல்கலைக்கழகங்களின் நிர்வாக மற்றும் கல்விப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.

அரசாங்கம் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.








