Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஷீந்திர ராஜபக்ச தூக்கமின்மை காரணமாக மருத்துவ உதவி தேவை; நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சஷீந்திர ராஜபக்ச தூக்கமின்மை காரணமாக மருத்துவ உதவி தேவை; நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

1 year ago
in மட்டு செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள், தூக்கமின்மைக்கு மருத்துவ உதவி வழங்கப்படாவிட்டால், அவர் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த ஆண்டு ஒக்டோபரில் பக்கிங்ஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு பரீட்சையை ராஜபக்ஷ எழுதவிருப்பதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனவே, தனது கட்சிக்காரரை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பது அவர் பரீட்சைக்கு வருவதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்றும், பிணை வழங்குவதைத் தீர்மானிப்பதில் இதை ஒரு முக்கிய காரணியாகக் கருதுமாறும் நீதிமன்றத்தில் கோரினர்.

எவ்வாறெனினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான், ஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
பின்லாந்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் உயிர்மாய்த்த எம்.பி

பின்லாந்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் உயிர்மாய்த்த எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.