பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞர், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு எட்டு பேருடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது நேற்று (24) அதிகாலை 12.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கல்கிஸ்ஸையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான கிஹான் துலான் பெரேரா எனும் 21 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணையின்போது தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








