அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார். குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார்.
இந்நிலையில் ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ட்ரம்ப் விதித்துள்ள உத்தரவுகள் அவரது அதிகார மீறலாகும் எனக் கூறி அனைத்து உத்தரவுகளையும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த மேல்நீதிமன்றம் ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் இவ்வாறு வரிகளை விதிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.








