“கிளீனிங் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், சுயாதீன தொலைக்காட்சி முன்னெடுத்து வரும் வீதி விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றின் பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று (01) விசேட போக்குவரத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி, நெடுஞ்சாலை விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் அதிவேகமாக பயணித்த வாகனங்களை அடையாளம் காணும் சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இதன்போது பல்வேறு வாகனங்கள் அதிக வேகத்தில் பயணித்தமை கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.














