மட்டக்களப்பில் யுத்தம் மற்றும் விபத்துக்களால் அங்கவீனமடைந்த 58 பொலிஸாருக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான நாட்சக்கரவண்டிகள், ஊன்றுகோல்கள் மற்றும் மருத்துவ உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாருமான நில்மினி நீட்டா சமரதுங்க அவர்களின் முன்னிலையில், சோழகன் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விரிவுரையாளர் மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்றது.
நிகழ்விற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் மெண்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முதல் கட்டமாக, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பணியாற்றி யுத்தம் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனமடைந்த பொலிஸாரின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் உதவிப் பொருட்கள் மற்றும் பண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

















