Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர்.

இந்தப் பதவி உயர்வுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.

பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

August 10, 2026
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

August 10, 2026
17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!
செய்திகள்

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

August 10, 2026
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!
செய்திகள்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

August 10, 2026
Next Post
மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.