2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்டக்களப்பின் அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
மாணவி ம. ரொவேக்கா 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டங்களில் முதலிடம் பிடித்ததுடன், 100 மீற்றர் ஹர்டில்ஸில் மூன்றாம் இடத்தை பெற்றார். இதன் மூலம் அவர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதேவேளை, மாணவி ந. டாரிகா தட்டெறிதலில் 29.73 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றினார். மேலும், 17 வயதுக்குட்பட்ட கபடி அணியில் முதல் நிலை வீராங்கனையாகவும் திகழ்ந்தார்.
இந்த வெற்றிகளுக்குப் பின்னால், வித்தியாலய அதிபர் வல்லிபுரம் முருகதாஸின் வழிகாட்டுதலும், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நிக்கோள் நிஷாந்தனின் உழைப்பும் குறிப்பிடத்தக்கது. உடற்கல்வி ஆசிரியர் ஶ்ரீ. பிரபானந்தன் மற்றும் பயிற்றுவிப்பாளர் திருமதி நி. பிரதீஸ்கரனின் பங்களிப்பும் இச் சிறப்பான சாதனைகளில் முக்கிய பங்கு வகித்தது.
மைதான வசதிகள் இல்லாத நிலையிலும், வறுமைமிக்க குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தும் மாணவிகள் வெளிப்படுத்திய திறமை பாராட்டுக்குரியது. பாடசாலை சமூகம் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கையுடன், தேசிய மட்டத்திலும் மேன்மையான சாதனைகள் படைக்க மாணவிகள் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.














