பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற இக் கொலைச் சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று (07) இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபருக்கு சொந்தமான வேன் மற்றும் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான நபர் பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அம்பறை குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.









