இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைக்கும் முயற்சியை தாம் தவறுதலாக மேற்கொண்டதாகக் கூறி, அதனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவில்,
“நான் தவறுதலாக கூட்டிய இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். நடந்த தவறுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி முதல் முறையாக இச்சங்கம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், சில நாட்களில் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் தமது முடிவை மீளப்பெற்றுள்ளதாகவும், அதனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதற்கான அறிவிப்பை வழங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.









