முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2020 ஆம்ஆண்டு பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக ‘அபே ஜன பல’ கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம்திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அத்துரலியே ரதன தேரரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்தது.
இந்தநிலையில், சந்தேகநபரான அத்துரலியே ரத்ன தேரர், கடந்த 29 ஆம்திகதி நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து, இன்று (12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.








