மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் கடந்த 2014 ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஆண் ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபதாரமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த 11ம் திகதி தீர்ப்பளித்தார்.
குறித்த பிரதேசத்தில் கடந்த 2014ம் ஆண்டு 13 வயது சிறமி ஒருவரை அப்பேது 22 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிசார் வழக்கு தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்க இடம்பெற்று வந்துள்ள நிலையில், கடந்த 11 ம் திகதி வியாழக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிபதி எடுத்துக் கொண்ட போது குறித்த நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் வைத்திய அறிக்கைகள் மூலம் குற்றவாளி என இனங்காணப்பட்டார்.
இதனையடுத்து குறித்த நபருக்கு முதலாவது குற்றத்துக்கு 3 மாதகாலம் 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும், இரண்டாவது குற்றத்திற்கு 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டபணமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் அந்த பணத்தை வழங்காத பட்சத்தில் சிறைத்தண்டனை என கட்டளையிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.








