Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு

மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு

9 months ago
in செய்திகள்

திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டால்பின் உள்ளிட்டவகையில் சிக்குகிறது.

அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.

இந் நிலையில் இன்று காலை சேதுக்கரை தெற்கு மன்னா் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பெண் கடல் பசு எனவும் அது சுமார் 300 கிலோ எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா அல்லது உடல் நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என கீழக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர். அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா
அரசியல்

“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா

June 25, 2026
கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?
செய்திகள்

கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?

June 25, 2026
“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்
காணொளிகள்

“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்

June 25, 2026
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

June 25, 2026
இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!
செய்திகள்

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

June 25, 2026
Next Post
இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி துஷ்பிரயோகம்

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி துஷ்பிரயோகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.