வாழைச்சேனையைச் சேர்ந்த கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் தசாப்த (10 ஆண்டு) நிறைவு விழாவும் நேற்று (22) பாடசாலை அதிபர் சி. சிவநேசராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் என். நேசகஜேந்திரன், ஏ. ஜெயக்குமணன், ஏ. தயாழசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர் ஆலோசகர்கள், கிராம சேவகர், ஆலய தலைவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு கழகத்தினரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பாடசாலையின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து நடைபவணியில் கலந்துகொண்டனர். அதிதிகள் மாணவர்களின் பாண்டு வாத்திய இசையுடன் மலர் கொத்து வழங்கி வரவேற்கப்பட்டனர். பின்னர் தேசியக் கொடி, பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.
இதன்போது கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாடசாலை சமூகத்தின் சார்பில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கலந்து கொண்ட கல்வி அதிகாரிகளும் பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





















