கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு-கொழும்பு A-11 நெடுஞ்சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தலைமையகம், 23வது இராணுவ டிவிஷன் இராணுவத்தினர், ICST பல்கலைக்கழகம் மற்றும் கோறளைப்பற்று வடக்கு, மேற்கு பிரதேச சபைகள் இணைந்து புனானை முதல் நாவலடி சந்தி வரை 15 கி.மீ. தூரப்பகுதியில் சிரமதானம் மேற்கொண்டனர்.
இப்பகுதியில் வீட்டு மற்றும் கடை கழிவுகள் சாலையோரம் வீசப்படுவதால் காட்டு யானைகள் குப்பைகளை சாப்பிட வந்து பாதசாரிகள் மற்றும் பயணிகளுக்கு ஆபத்துகளை உருவாக்கி வந்ததாக இராணுவம் தெரிவித்தது. இதனைத் தடுக்கும் வகையில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறையில் அகற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பல்லே கும்புரா, 23வது டிவிஷன் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியங்கா குணதிலக, படைத்துறை உயர் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













