செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆம் நாள் பணிகள் நேற்று (11) யாழ்ப்பாணம் நீதவான் செ. லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன.
அகழ்வுப் பணிகளின்போது புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தம் 539 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 524 எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 516ஆம் இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதியின் இடுப்புப் பகுதியில் இருந்து தாயத்து போன்ற பொருள் ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றும் உள்ளிட்ட சில சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.








