மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில், தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகள் புரிந்த மாணவர்களும் 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
படிப்பக உரிமையாளர் பேரின்பம் ஜெயக்கமல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
அரிகரன் சப்தனா – அகில இலங்கை தமிழ்மொழி தினப்போட்டியில் குறுநாடக ஆக்கத்தில் தேசிய முதலாம் இடம்,
தேவரெத்தினம் திஷாந்தனா – அதே போட்டியில் கவிதை ஆக்கத்தில் தேசிய முதலாம் இடம்,
மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியடைந்த மாணவர்கள்,
என அனைவரும் பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், சாதனையாளர் மாணவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பல நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.














