செவனகல சீனித் தொழிற்சாலையிலிருந்து மதுபான உற்பத்தி தொடர்பான இரசாயன பொருட்கள் நீரில் கலப்பதன் காரணமாக அம்பலாந்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தும் வரையில் சுத்திகரிப்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுமென குறிப்பிட்டுள்ளது.
நேற்று (26)பிற்பகல் நீர் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது அம்பலாந்தோட்டை பிரதேச சபையின் தலைவர் விபுல விஜயதாச இதனைத் தெரிவித்துள்ளார்.








