Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு

பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பூரணை அரச விடுமுறை தினமான ஜூலை 29 ஆம் திகதி கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கான கட்டாயக் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்தின் சார்பில் கல்வி அதிகாரிகள் நியாயமற்ற தீர்மானங்களை எடுத்து வருவதாக குற்றம் சுமத்தினார்.

கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் இத்தகைய முடிவை எடுத்திருக்கக் கூடாது என்றும், அரச விடுமுறை நாளில் நிகழ்வை நடத்தும் அதிகாரிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில், இதில் பங்கேற்கும் அதிபர்களுக்கு எந்தவித மேலதிக கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்தக் கூட்டத்தை அரச விடுமுறை நாளில் நடத்தாமல், வழமையான வேலை நாளில் நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முன்னதாக, “தூய்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “தூய்மையான சமூகம்” என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைத்து அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ. அந்தரகே சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, பூரணை தினமான ஜூலை 29 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கண்டி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்
செய்திகள்

கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்

July 27, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் மேக்ரான்
செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் மேக்ரான்

July 27, 2026
கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!

July 27, 2026
கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!
செய்திகள்

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!

July 27, 2026
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

July 27, 2026
மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
உலக செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

July 27, 2026
Next Post
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.