இலங்கையை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை (New Vithanakande Tea Factory) தயாரித்த
தேயிலை அதிக விலைக்கு விற்கப்பட்ட தேயிலை என்ற பெயரில் இலங்கை கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த தொழிற்சாலை தயாரித்த பிரீமியம் Ceylon Black Tea (FFExSp) ஜப்பானில் ஒரு கிலோகிராம் ரூ. 252,500 (சுமார் ¥125,000) விலையில் விற்கப்பட்டது.
துறைசார் அதிகாரிகள் தெரிவித்ததாவது,

இந்த சாதனை, உலக சந்தையில் உயர்தர இலங்கைத் தேயிலைக்கு உள்ள தேவை அதிகரித்திருப்பதையும், இலங்கை ஆடம்பரத் தேயிலை சந்தையில் தனது நிலையை பலப்படுத்தியிருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
New Vithanakande, குறிப்பாக அதன் OP1 தரத் தேயிலை மூலம் ஏலங்களில் எப்போதும் அதிக விலையைப் பெற்றுள்ளது. ஆனால் இச்சாதனை, இலங்கைத் தேயிலையின் மதிப்பை உலகின் மிக உயர்ந்த நிலையில் நிலைநிறுத்திய வரலாற்று மைல்கல்லாக கருதப்படுகிறது.
இலங்கை இதற்கு முன் பல தேயிலை தொடர்பான உலகச் சாதனைகளை படைத்துள்ளது — 2010ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய தேயிலை கோப்பை தயாரித்ததும் அதில் ஒன்று. ஆனால், உலகின் மிக அதிக விலையிலான தேயிலை என்ற கின்னஸ் சாதனை இதுவே முதல் முறை ஆகும்.








