கொழும்பில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு உடல் கிராண்ட்பாஸ் பகுதியிலும் மற்றொரு உடல் தெஹிவளையிலும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (29) மாலை கிராண்ட்பாஸின் இங்குருகொட சந்தியில் முதல் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அது 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் என நம்பப்படுகிறது.
உயிரிழந்த அந் நபர் தோராயமாக 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் என்பதோடு கருப்பு அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற டீ-ஷர்ட் அணிந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தெஹிவளை,சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மற்றுமொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 23 வயது இளைஞன் எனத் தெரிய வந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலை பிணவறையில் இளைஞனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








