பாசிக்குடா அனிலானா கொட்டலுக்கு அருகே உள்ள தனியார் தென்னந்தோப்புகளில் திடீரென தீப்பற்றியது.
தகவல் பெற்ற கெளரவ சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் உப தவிசாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ அணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஓட்டமாவடி சபை தீ அணைக்கும் இயந்திரத்துடன் தீ பரவலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இராணுவத்தினரும் தீ அணைப்பு பணிகளில் பங்களித்தனர்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் மற்றும் சுற்றுலா விடுதி மேலாளர் மாகீர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பிரதேசத்திற்கு தீயணைப்பு இயந்திரம் இல்லாத காரணத்தால், இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீப்பற்றலை கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வரும் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக தவிசாளர் கவலை தெரிவித்துள்ளார்.
















