சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மட்டக்களப்பு களுவன்கேணி பலாச்சோலை ஞானலிங்கேச்சரர் அறநெறி பாடசாலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாகாண மட்ட பஞ்சபுராணம் ஓதல் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், புலமை பரிசில் சிறப்பாண்மை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் சிறுவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசுகள் சேவகம் தொண்டு நிறுவனத்தின் மூலம் லண்டன் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினரால் வழங்கப்பட்டன.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகச் சிரேஸ்ட் ஊடகவியலாளர், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச கிளை தலைவர் நிலக்சன், சேவகம் நிறுவன பொருளாளர் கு. சுபோஜன், சேவகம் நிறுவன உறுப்பினர் அ. ஜெயராஜ், அறநெறி பாடசாலை ஆசிரியர் அலகேஸ்வரி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறநெறி பாடசாலை நிர்வாகம் லண்டன் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துள்ளது.





















