நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தை முன்னிட்டு, இன்று (02) மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் சகலகலாவல்லி மாலை பாடப்பட்டதுடன், வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. மேலும், செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரால் நவராத்திரி பூஜையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றப்பட்டது.
நிகழ்வில் கிளைத் தலைவர் விமலநாதன், உபதலைவர் கஜேந்திரன், செயலாளர் ருத்ராஜ், உறுப்பினர் தில்லைநாயகம் தனுசன், கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் ராஜ்குமார், ICRC பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





















