நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (12) நடைபெறவுள்ளது.
இதன்படி, குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான முன்மொழிவு, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடல், நீதித்துறை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








