தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NHDA) 2025 ஆம் ஆண்டின் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 04 வீட்டுத்திட்டங்களில் 3 வீடுகள் நேற்று (02) உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் T.B. சரத் தலைமையில் வீடுகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, தெற்கு, தாழங்குடா மற்றும் இராஜதுரைக்கிராம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு, பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், NHDA தொழில்நுட்ப அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



























