கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதுடன் கார், முச்சக்கரவண்டி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கயமடைந்த சாரதிகள் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








