மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.
இந்த விழா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் நடேசன் காண்டீபன் தலைமையில் அக்டோபர் 7ஆம் தேதி பாடசாலையில் நடைபெற்றது.
நிகழ்வின் சிறப்பு அதிதியாக கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் கலாபூசணம் முத்துமாதவன் கலந்துகொண்டார். அதிபரும் ஆசிரியர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசையுடன் மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி விழாவை சிறப்பித்தனர்.












