Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்; நாமல் ராஜபக்ச

குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்; நாமல் ராஜபக்ச

10 months ago
in செய்திகள்

குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை இந்த அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து கைது செய்ததாகவும் அவரை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது என நாமல் தெரிவித்துள்ளார்.

செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவது நல்ல விடயம் என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமிட்ட குற்ற கும்பல்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள்? அவர்களுக்கு யார் உடந்தையாக செயல்படுகின்றார்கள் என்பது குறித்து இந்த நாடு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த தகவல்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடற்படை தளபதி நிஷாந்த உலுகஹாதென்ன கைது விவகாரம் போல் அழுத்தங்களுக்கு மத்தியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நிசாந்த கைதின் போது அரசியல் தலையீடுகள் இடம் பெற்றதாக நாங்கள் கேள்விப்பட்டோம் என தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானிகள் இரண்டு போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு போலி சாட்சிகளை அளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றவாளிகள் அனைவரும் இந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலேயே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் 17 போலி கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டதாக துறைசார் பிரதி அமைச்சரே ஒப்புக்கொண்டு உள்ளார் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதேபோன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு கொள்கலன்களில் போதைப் பொருள் இருந்ததாக அரசாங்கம் ஒப்புக்காண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத கொள்கலன்களில் எவ்வாறான பொருட்கள் இருந்திருக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.