Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேசமான திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) தினம் நடைபெற்றது.

சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய லண்டனில் வசிக்கும் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி சேவகம் நிறுவனத்தின் ஊடாக இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் (225000/-) பெறுமதியான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு அதிகஸ்ட பிரதேசமாக காணப்படும் திகிலிவெட்டை பாடசாலை மாணவர்களுக்கு நகர்புற பாடசாலைகளுக்கு இணையாக பாண்ட் வாத்திய குழுவை உருவாக்க வேண்டும் என்பது இதுவரை காலமும் ஒரு கனவாகவே இருந்து வந்த நிலையில் அது குறித்து சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் அவர்களிடம் பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்த பாண்ட் வாத்திய கருவிகள் கையளிக்கப்பட்டிருந்தன.

ஒரு வார காலத்திற்குள் ஆசிரியர், அதிபர் ஆகியோரின் முயற்சியில் பாண்ட் வாத்திய பயிற்சிகள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிகழ்வில் மாணவர்கள் மிகவும் சிறப்பான முறையில் பாண்ட் வாத்தியங்களை இசைத்து வரவேற்பு நிகழ்வை நடாத்தியிருந்தனர்.

இதன் போது பாண்ட் வாத்தியங்களை பெற்றுக் கொள்ள நிதி உதவி வழங்கி லண்டனில் வசிக்கும் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினருக்கு பாடசாலை அதிபர் தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.

பாடசாலை அதிபர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக லண்டனில் இருந்து வருகை தந்த பாலேந்திரா சுகன்யா மற்றும் அவரது புதல்வரான பிரணவன், வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுதாகரன், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் ஆகியோர் கலந்து கொண்டதோடு. கௌரவ பாராளுமன்ற சாணக்கியனின் கல்குடா தொகுதி இணைப்பாளர் நிலக்சன், திகிலிவெட்டை பிரதேச சபை உறுப்பினர் சிவராசா, சேவகம் நிறுவனத்தின் பொருளாளர் சுபோஜன், சேவகம் நிறுவனத்தின் உறுப்பினர்களான ஜெயராஜ், ஜிவா, கயல்விழி, மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கட்சிகள் தனதாக்குவதற்கு எதிராக பிரேரணை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கட்சிகள் தனதாக்குவதற்கு எதிராக பிரேரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.