கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம, மாதம்பே, ஊர்காவற்துறை, ஹபராதுவ, மதவாச்சி, கம்பஹா மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தம்புத்தேகம, எரியகம பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதியதில் சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதுடைய இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மாதம்பே, புலாத் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதிய விபத்தில் 52 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பாதையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 59 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, மதவாச்சி, யாகவெவ பகுதியில் பவுசர் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா, உடுகம்பொல பகுதியில் டிப்பர் வாகனம் மோதி மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தை, கிரிலாவல பகுதியில் வேன் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், ஹபராதுவ, பலுவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி 50 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.








