நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர் கோரலகே, காவலர் லக்ஷன்,விஜேசிங்க மற்றும் காவலர் சமித ஆகியோரே குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர், அடிப்படை மருத்துவ சிகிச்சை அளித்து, மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடல் நீரில் அடித்து செல்லப்பட்டு, காயமடைந்த பெண் ஏத்துக்கல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








