பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்த அசலபுர பகுதியில் இன்று (21) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற துயரச்சம்பவத்தில், யானை ஒன்று புகையிரத மோதி உயிரிழந்தது.
மட்டக்களப்பிலிருந்து கல்லோயா நோக்கி பயணித்த புகையிரதம், பாதையை கடக்க முற்பட்ட காட்டுயானையை மோதியதன் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்தது என்று வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் புகையிரதப் பயணத்தில் சிறிது நேர தாமதம் ஏற்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வனவிலங்கு அதிகாரிகள் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








