மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் திடீரென காட்டு யானைகள் உள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
பாலமுனை நகர் பகுதி பாடசாலை ஒன்றின் முன் நுழைவாயிலை யானைகள் உடைத்து, சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யானைகள் ஆரையம்பதி நகர் பகுதிக்குள் உள் நுழைந்து வேலிகளை சேதப்படுத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்தக் காட்டுயானைகள் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக உணவுதேடி சுற்றித்திரிந்து அச்சுறுத்தி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டனர்.








