Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம்(31.08.2023) இடம்பெற்றிருந்த நிலையில் சில ஊடகவியலாளர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தது.

இது தொடர்பில் நடந்த விடயம்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மட்டு ஊடகவியலாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு என்றும் இல்லாத புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டிருந்தது. அதாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்களிடம் அவர்கள் தனிப்பட்ட ஊடக அடையாள அட்டை தவிர்ந்து இலங்கை ஊடக அமைச்சினால் வழங்கப்படும் தகவல் பெற்றுக்கொள்வதற்கான ஊடக அடையாள அட்டை கட்டாயம் இருக்கவேண்டும் என்பதே, ஆனால் ஊடக அமைச்சினால் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும் மட்டு மாவட்ட செயலக ஊடகப்பிரிவினால் ஒரு கடிதம் வழங்கப்பட்டால் மாத்திரமே அனுமதி அது இல்லாதவர்கள் கலந்து கொள்ள முடியாது ஆனால் என்றும் இல்லாத இந்த புதிய சட்டம் புதிதாக கொண்டுவந்தற்கான காரணம் என்ன? இதற்கு அனுமதியளித்தது யார்? என்று கேட்டே ஊடகவியலாளர்கள் இன்று பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் அக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த பல ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த சில ஊடகவியளார்கள் இன்றைய கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில ஊடகவியலாளர்களைப் பழிவாங்கும் நோக்குடன் இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது

இவ்விடயத்தை இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஊடக அமைச்சருக்கு தெரியப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை என கூறப்படுகிறது.

அதைனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட ஊடக உரிமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையகத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் முறைப்பாடொன்றினையும் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை ஊடகவியலாளர் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
நாடுகள் கைச்சாத்திட்ட நிலவு ஒப்பந்தம் பற்றி தெரியுமா?

நாடுகள் கைச்சாத்திட்ட நிலவு ஒப்பந்தம் பற்றி தெரியுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.